• Login / Register
  • செய்திகள்

    பெரியகோவில் தேரோட்டம்: தஞ்சையில் விடுமுறை அறிவிப்பு

    புகழ் பெற்ற  தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஏப். 20 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாள்கள் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    அந்தவகையில், கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஏப். 20-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும் ஏப். 20 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.




    Leave A Comment