• Login / Register
  • விளையாட்டு

    ரிஷப் பந்துக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை நிறைவு!

    கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு முழங்காலில் மேற்கொள்ளப்பட்டுள்ள அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா்.

    படுகாயங்களுடன் தப்பியுள்ள ரிஷப் பந்த் மேல்சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது.

    மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விளையாட்டு மருத்துவச் சிகிச்சைத் துறையின் தலைவர், மருத்துவர் தின்ஷாவின் மேற்பார்வையில் ரிஷப் பந்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கோகிலாபென் மருத்துவமனையில் ரிஷப் பந்துக்கு நேற்று வெள்ளிக்கிழமையன்று முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    தொடர் சிகிச்சையினால் காயம் குணமான பிறகே ரிஷப் பந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment