• Login / Register
  • சோதிடம்

    குரு-சுக்கிர சேர்க்கை இன்று; வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு?

    சுக்கிர பகவான் இன்று (ஏப்ரல்-24) புதன் கிழமை மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயற்ச்சி ஆகின்றார். இதையடுத்து ஏற்கனவே மேஷ ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவானோடு சேர்ந்து சஞ்சாரம் செய்யப்போகின்றார்.

    12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழப்போகும் குரு - சுக்கிர சேர்க்கையின் மூலம் சில ராசியினருக்கு யோக பலன்கள் கிட்ட இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் தான் இந்த குரு பகவான். ஒருவர் செல்வ செழிப்புடன் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், சமூகத்தில் நல்ல அந்தஸ்து என அனைத்து வித சௌபாக்கியத்துடன் வாழ காரணியாக இருப்பவர் இந்த குருபகவான்.

    இவர் ஆண்டிற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். இந்த குரு பகவானின் மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் எப்பொழுதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

    இதேபோன்று மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். அவ்வாறாக இன்று (ஏப்ரல்-24) சுக்கிரன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

    குரு பகவான் ஏற்கனவே மேஷ ராசியில் யெற்ச்சியாகியுள்ள நிலையில் பகைகிரங்களாக, எதிரெதிராக இருக்கக்கூடிய இரு கிரகங்கள் ஒன்றாக ஒரு ராசியில் சேர உள்ளனர்.

    இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதாக ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள் அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    குரு சுக்கிர சேர்க்கையால் பண மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்

    மேஷ ராசி:

    சுக்கிரன் குரு சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு பலவிதமான ஏற்றங்களை தரப் போகிறது. வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து முன்னேற்றம் உருவாகும். பணம் சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதோடு பதவி உயர்வு சம்பள உயர்வு தேடி வரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும்.

    ரிஷப ராசி:

    குரு மற்றும் சுக்கிரனின் இந்த சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை அள்ளி பருகப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான். பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    கடக ராசி:

    குரு மற்றும் சுக்கிரனின் இந்த சேர்க்கையால் ஆடம்பர வசதிகளை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் நீங்கள் தான். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலனை பெற்றுத் தரும். காரியத்தில் வெற்றி கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். எதிர்பாராத நேரத்தில் நண்பர்களால் உதவி கிடைக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். பணவரவு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் படி தொகுக்கப்பட்ட பலன்களாகும். உங்கள் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.

    ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் இதனை பின்பற்றுங்கள்.

    Leave A Comment