• Login / Register
  • செய்திகள்

    தேர்தல் நடத்தை விதிமீறல்: பாஜக, காங்கிரஸ் மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    மக்களவை தேர்தல் பிரசாரங்களின்போது, தேர்தல் நடத்தை விதிமீறிய புகாரில், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மதம், சாதி, சமூகம், மொழி அடிப்படையில் பிளவு ஏற்படுத்துவதாகவும், வெறுப்பு பிரசாரம் மேற்கொள்வதாகவும் பிரதமர் மோடி, ராகுல் மீது புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதில், "தங்கள் கட்சி வேட்பாளர்களின் நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் முதன்மையாக பொறுப்பேற்க வேண்டும். உயர்ந்த பொறுப்பில் இருக்கும் நபர்களின் பிரசார உரைகள் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை" என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், இது தொடர்பாக வரும் 29ம் தேதிக்குள் விளக்களிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    Leave A Comment