• Login / Register
  • செய்திகள்

    சிட்னி விமான நிலையத்தில் பதற்றம்; 30 வயது நபர் கைது!

    இலங்கை நோக்கி புறப்பட இருந்த விமானத்தின் பிரத்தியேக பகுதிக்குள் நபர் ஒருவர் அத்துமீறி உள்நுழைந்த நிலையில் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்து பதற்றமான சுழ்நிலை ஏற்பட்டிருந்தது.

    அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை காட்டும் காணொளி ஒன்றை சர்வதேச ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

    சிட்னி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் நபர் ஒருவர் நுழைந்ததால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதன்போது பாதுகாப்பு தரப்பினர் சந்தேக நபரை கைது செய்ததுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

    30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

    Leave A Comment