• Login / Register
  • ஆன்மிகம்

    சிவகுரு ஆதீனத்தில் பகவத்கீதை சொற்பொழிவும் கலந்துரையாடலும்!

    ஸ்ரீமத் பகவத்கீதை விஷ்வரூப தரிசன யோகம் (அத்யாயம் 11) சொற்பொழிவும் கலந்துரையாடலும் சிவகுரு ஆதீனத்தில் வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி இடம்பெற உள்ளது.

    யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளின் ஸ்ரீமத் பகவத்கீதை சொற்பொழிவும் கலந்துரையாடலும் இடம்பெற்று வருகிறது.

    18 அத்தியாங்களை கொண்ட ஸ்ரீமத் பகவத்கீதையின் முதல் 10 அத்தியாங்களும் சொற்பொழிவும் கலந்துரையாடலுமாக கடந்த வாரங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் 11 ஆவது அத்தியமான விஷ்வரூப தரிசன யோகம் வரும் 22 ஆம் திகதி (திங்கட்சிழமை) முதல் ஆரம்பமாகி இடம்பெற உள்ளது.

    சிவகுரு ஆதீன மண்டபத்தில் வரும் திங்கட்கிழமை மாலை 05.00 மணி தொடக்கம் 06.00 மணி வரை இடம்பெறும் குறித்த பகவத்கீதை சொற்பொழிவில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனுமதி இலவசம்.

    Leave A Comment