• Login / Register
  • செய்திகள்

    அருணாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

    அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று(25) ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையை இணைக்கூடிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    திபாங் பள்ளத்தாக்கை இணைக்கூடிய பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுவதாக அருணாசல முதல்வர் பெமா காண்டு தெரிவித்தார்.


    Leave A Comment