• Login / Register
  • செய்திகள்

    தராகி சிவராமுக்கு வடமராட்சியில் நினைவேந்தல் ஏற்பாடு!

    படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை வடமராட்சியில் முன்னெடுக்கப்பட உள்ளது.

    ஊடகவியலாளர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    வரும் ஞாயிற்றுக்கிழமை (28) அவர் படுகொலை செய்யப்பட்டதன் 19 ஆண்டு நினைவு நாளாகும். அந்தவகையில் தராகி சிவராமின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட உள்ளது.

    விநாயக முதலியார் தெரு, பருத்தித்துறையில் உள்ள வடமராட்சி ஊடக இல்ல அலுவலகத்தில் நாளை மறுதினம் (28) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு குறித்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட உள்ளது.

    Leave A Comment