• Login / Register
  • செய்திகள்

    ஆலயத்தில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு!

    பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.

    இன்று ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பகிய நிலையில் முதல் நாள் பரீட்சைக்கு செல்வதற்கு முன்னதாக இன்று காலை பலாங்கொட மரதன்ன பிரதேசத்தில் உள்ள ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றிருந்த அரினாத் ரஞ்சித் குமார என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

    அங்கு மயங்கி விழுந்த மாணவன் மரதன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    பிரேத பரிசோதனை பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன்இ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Leave A Comment