பொதுத் தேர்வு அறையில் முகக் கவசம் கட்டாயமில்லை: ராதாகிருஷ்ணன்
தமிழகம் முழுவதும் இன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்
தொடங்கியது.
3,119 தேர்வு மையங்களில், 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ,
மாணவிகள் தேர்வுகளை எழுதுகின்றனர்.
இந்த நிலையில், தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் முகக் கவசம்அணிய வேண்டும் என்பது போல பொது சுகாதாரத்துறை இயக்குநர் பெயரில் ஒரு சுற்றறிக்கை வெளியாகி இருந்தது. அந்த சுற்றறிக்கை போலியானது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பொது சுகாதாரத்துறை
இயக்குநர் நேற்று எந்த வித அறிக்கையும் வெளியிடவில்லை. தேர்வு அறைகளில் மாணவ,
மாணவிகள் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை’ என்று தெரிவித்தார்.
Leave A Comment