• Login / Register
  • செய்திகள்

    பணி நிரந்தப் போராட்டம்: 497 செவிலியா்கள் மீது வழக்குப் பதிவு

    சென்னை ஓமந்தூரா் பல்நோக்கு மருத்துவமனை முன்பு 500க்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டக் கூடாது எனவும் செவிலியர்களிடம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், காவல்துறையினரின் பேச்சு வார்த்தைக்கு உடன்படாத செவிலியர்கள் திடீரென சாலையில் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக செவிலியர்களை கைது செய்து மாலை விடுவித்தனர்.

    இந்த நிலையில், இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 497 தற்காலிக செவிலியர்கள் மீது, முன் அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Leave A Comment