• Login / Register
  • செய்திகள்

    இலங்கை : நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிப்பு

    இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற நிலையில் பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.

     

    நாடாளுமன்றத்தின் புதிய துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய துணைத்தலைவராக அஜித்  ராஜபட்ச வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டார்.

     

    இதனிடையே அதிபர் கோத்தபயாவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கையில்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

     

    அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் விழுந்தன. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

     

    Leave A Comment