• Login / Register
  • செய்திகள்

    தொடங்கியது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த வித பொதுத் தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தன.

    இந்த நிலையில், கடந்த வாரம் 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின.

    இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.

    11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில், 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர்.

    இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் நடைபெறுகின்றன. 

    தனித் தேர்வர்களாக 5 ஆயிரத்து 673 மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு 115 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கண்காணிக்க ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று தொடங்கியுள்ள 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகின்ற மே 31ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.


    Leave A Comment