• Login / Register
  • செய்திகள்

    ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு; வவுனியாவில் சோகம்!

    சிறுவர்கள் இருவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலஙங்களாக மீட்கப்பட்ட சம்பவம் வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிள்ளைகள் இருவர் உட்பட கணவன், மனைவி என ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் இன்று (07) செவ்வாய்கிழமை காலை வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

    வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் வசித்துவந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

    பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும், தந்தை வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42)இ அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது 09), கௌ.கேசரா (வயது 03) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

    இவ்வாறு ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Leave A Comment