• Login / Register
  • செய்திகள்

    இத்தாலியில் படகு விபத்து; 30 இற்கு மேற்பட்டோர் பலி 50 பேர் மீட்பு!

    இத்தாலி கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 30 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 50 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    100 இற்கு மேற்பட்ட அகதிகள் பயணித்த படகு இத்தாலியின் கலாப்ரியா பிராந்தியத்தின் கிழக்குக் கடற்கரையில் சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.

    இதில் 30 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    கடலில் மூழ்கி உயிரிழந்தவர்ளில் 27 பேரின் உடல்கள் கரையொதுங்கிய நிலையில் மேலும் மூவரின் உடல்கள் கடலில் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    படகு விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 100 இற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிக் கொண்டு வந்த படகு, கரடுமுரடான கடல் வானிலையின் போது பாறைகளின் மீது மோதியதில் விபத்துக்குள்ளானதாக தெரிய வருகிறது.
    --------------------------------------------

    ⭕️ தமிழ்நாடு, இந்தியா, இலங்கை தொடர்பான உண்மை செய்திகளை அறிந்துகொள்வதற்கு இணைந்திருங்கள்... TNMedia News WhatsApp குழுமத்துடன்...!

    👉 உங்களது நண்பர்களையும் TNMedia News WhatsApp குழுமத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்..!

    👉 அன்றாட உண்மை செய்திகளுக்கு இணைந்திருப்போம்!! 
    TNMedia 24 வாட்ஸ்அப் குழு:
    👇👇👇
    https://chat.whatsapp.com/HKH7cx67fqZJ4rkpcRKm0p

    Leave A Comment