• Login / Register
  • செய்திகள்

    தமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!

    உலகத்தில்   இருக்கும் உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் சூரியனுக்கு  நன்றி கூறும், உழவர்களை போற்றும் தழிழர்த்திருநாளான தைப்பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வீடுகளில்  கோலமிட்டு,  இல்லத்தின் வாசலில் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி வைத்து புதிய பொங்கல் பானைக்கு புதிய மஞ்சளை கொம்பு செடியை புதிய நூலில் காப்பாக கட்டி, குங்குமம் வைத்து. மங்களகரமாக பொங்கலிட்டு கதிரவனை வழிபட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும்   உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரியம் மறக்காமல் உயிரோட்டமாகவும், மண் மணத்தோடும் வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    Leave A Comment