• Login / Register
  • மேலும்

    கத்தரி செடியை தாக்கும் சிறு இலை நோய் தாக்கத்திற்கு தீர்வு!

    சிறு இலை நோய் தாக்குதல் கத்தரி செடியை பெரிதும் பாதிக்கின்ற ஒன்றாகும். இந்நோய் 'பைட்டோபிளாஸ்மா' எனும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. நோய் பாதித்த செடிகளில் வளர்ச்சி குன்றி விடும். பாதித்த செடிகள் சிறுசிறு இலைகளாக அடர்ந்த நிலையில் சிறிய இடைக்கணுக்களை கொண்டு காணப்படும்.  காய்கள் வளர்ந்தாலும் அதில் விதைகள் சுருங்கி விடும்.  

    இதிலிருந்து கத்தரி செடிகளை பாதுகாக்க நோயுற்ற கத்தரி செடிகளை அழிக்க வேண்டும். வயலை களையின்றி பராமரிக்க வேண்டும்.

    அல்லது ஒரு டாங்கிற்கு ‘இமிடாகுளோபிரிட்’ 5 மில்லி அல்லது ‘அசிட்டாம்ப்பிரைடு’ 20 கிராம் வீதம் விதைத்த 30, 40 மற்றும் 60 வது நாட்களில் தெளித்தால் நோய் பரப்பும் காரணியை கட்டுப்படுத்தலாம். 

    மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட்,  இன்ட்ரான், ஸ்டிக்கால் என்று பல்வேறு வணிகப் பெயர்களில் கிடைக்கும் திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு 250 மேல் வீதம் சேர்த்து கலந்து தெளிக்கலாம்.

    Leave A Comment