• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு..? மார்ச் மாத ராசிபலன் 2024!

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசியினருக்கான மார்ச் மாதத்திற்கான ராசி பலன்கள்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்றமிகுந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும் செலவுகளும் அதிகமாகவே ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உடல் நலனில் கவனம் தேவை. சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் அதை உடனே கவனத்தில் கொண்டு மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை பெற முடியும்.

    வேலையை பொருத்தவரை வேலை சூழ்நிலை சாதகமாகவே இருக்கிறது. வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை திறம்பட செய்து முடிப்பீர்கள். இதுவரை தடைப்பட்டு இருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் கடினமாக உழைத்தால் அதிக அளவு லாபத்தை பெற முடியும் என்பதை கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதே சமயம் சுப விரயங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது மிகுந்த நன்மையை தரும். முடிந்த அளவிற்கு வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியாக இருப்பது மிகவும் நல்லது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்போடு அந்த வேலையை செய்து முடிப்பீர்கள். இருப்பினும் முழுமையாக யாரையும் நம்பாமல் தம் மேற்பார்வையில் பார்த்துக் கொள்வது சிக்கல்களை தவிர்க்க உதவும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மை வழிபட வேண்டும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நினைத்ததெல்லாம் நடக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிக அளவு பணவரவு ஏற்படும். இருப்பினும் சில எதிர்பாராத செலவுகளால் பணத்தை சேமிக்கும் சூழ்நிலை உருவாகாது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து எளிதில் வெற்றி பெறுவீர்கள். அதனால் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு மட்டுமே பணவரவு உண்டாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பிறரிடம் பேசும் பொழுது பேச்சில் பொறுமையை கையாண்டால் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்காத சூழ்நிலையே உண்டாகும். இருப்பினும் கொடுக்கும் வேலையை திறமையுடன் செய்து முடித்தால் பிற்காலத்தில் நல்ல பலனை பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இதனால் ஒரு சிலருக்கு சொந்தமாக வீடு மனை வாங்கும் யோகமும் உண்டாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த அனுசரித்து செல்வது மிகவும் நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். இதனால் தொழிலை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். மேலும் தொழிலில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக நீங்க ஆரம்பிக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

    Leave A Comment