• Login / Register
  • மேலும்

    கருவளையத்திற்கு தீர்வாகும் உருளைக்கிழங்கு! சமயலறையில் தீர்வு

    கண்கள் கீழே கருவளையம் வந்தால் அது பெரும் பிரச்சனைதான்,   அழகை கெடுப்பதோடு மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் தரக்கூடியது, அதனால் அதனை பராமரிக்க வேண்டியது அவசியமான ஒன்று. 

    கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று ஊட்டச் சத்துக் குறைபாடு, மரபு வழி, ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது. காரணத்தைக் கண்டுபிடிக்க ஒரு எளிய டெஸ்ட் உள்ளது. கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்கள் கண்ணுக்கு அடியிலான பகுதியை லேசாகக் கீழே இழுத்துப் பாருங்கள். 

    உடம்பு சரியில்லை எனப் போனால் மருத்துவர்கள் உங்கள் கண்களை டெஸ்ட் செய்வார்களே, அதே மாதிரிதான். கண்ணுக்குள் பார்க்காமல், கண்ணுக்கடியிலான தோல் பகுதியைப் பாருங்கள். அது வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணமாக இருக்கும். அதிலும் குறிப்பாக இரும்புச் சத்தும் ஆக்சிஜனும் குறைவாக இருக்கும். கருப்பாக இருந்தால், கருவளையத்துக்கு மரபு வழியோ, ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தமோ காரணமாக இருக்கலாம்.

    தூக்கமின்மை, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பது, போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது, கவலை, மனஅழுத்தம், காபி அதிகம் குடிப்பது, சூரிய ஒளியில் அதிகம் இருப்பது, கண்களை நன்றாக அழுத்தி கசக்குவது, தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவைகளே முக்கியமான காரணங்கள். இதனை எளிமையாக வீட்டில் இருக்கும் பொருளை கொண்டே நீக்கி விடலாம்.

    உருளைகிழங்கு: உருளைக்கிழங்கு சாறை காட்டன் வைத்து டிப் செய்து கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தில் தடவி விட்டு சிறிது நேரம் சென்ற பிறகு குளிர்ந்த நீரில் தண்ணீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் 2 வாரங்களில் நல்ல மாற்றத்தை காணலாம்.

    தக்காளி: ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளி சாறுடன் சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதனை உங்கள் கண்களுக்கு கீழிருக்கும் கருவளைய பகுதிகளில் தடவி விட்டு சுமார் 10 நிமிடங்கள் வரை உலர வைத்துபிறகு குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். தக்காளியில் இருக்கும் லைக்கோபின் மற்றும விட்டமின் சி போன்றவை தோலினை பாதுகாக்கும்.

    கருவளையத்திற்கு தீர்வுகள்!

    வெள்ளரிக்காய்: வெள்ளரியில் அதிக அளவு நீர் சத்துக்கள் இருப்பதால் அவைகளை கண்களுக்கு மேற்புறத்தில் வைப்பதால் கண்களுக்கு குளிர்ச்சியை தந்து பிரெஷ்ஷாக வைக்க செய்யும். மேலும் இது கருவளையத்தையும் நீக்க கூடியது.

    ஆரஞ்சு சாறு: ஆரஞ்சு சாறை ஒரு  கிண்ணத்தில் எடுத்து அதனை ஒரு காட்டன் வைத்து டிப் செய்து கண்களுக்கு கீழ் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவினால் கண்கள் பளிச்சிடும்.இதனை தினமும் செய்து வர நல்ல சேன்ஜ் விரைவில் கிடைப்பதை காணலாம்.

    புதினா: புதினா இலையின் சாறை எடுத்து அதனை கண்களுக்கு கீழ் மற்றும் மேற் பகுதியில் தடவி சுற்றி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகம் அலச வேண்டும். இதனை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    பாதாம் ஆயில்: இதனை தூங்க செல்வதற்கு முன் பாதாம் ஆயிலை கண்களுக்கு கீழே தடவி கண்களை சுற்றி 15 முறை மசாஜ் செய்து விட்டு படுக்க வேண்டும். இவைகளை தினமும் அல்லது அல்லது வாரத்தில் இரு முறை தொடர்ச்சியாக செய்து வந்தாலே கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் காணாமல் போகும். நீங்களும் இவைகளை பின்பற்றி வித்தியாசத்தை உணருங்கள்!

    ஐஸ்கட்டி: முதலில் ஒரு ஐஸ்கட்டியை எடுத்துக் கொண்டு அதனை மென்மையாக கண்களில் உள்ள கருவளையம் இருக்கும் பகுதியில் தேய்த்து வரலாம். இதனை தினமும் 2 முறை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    கிரீன் டீ: கிரீன் டீ பேக் இருந்தால் அதனை எடுத்து சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து கண்களுக்கு மேலே 10 நிமிடங்கள் வைக்கலாம்.

    பால்: காய்ச்சாத பால் இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன், பன்னீர் 2 டீஸ்பூன் சேர்த்து ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் காட்டன் பஞ்சை வைத்து ஊற வைக்கவும். பின்னர் அந்த பஞ்சுகளை 20 நிமிடம் கண்களுக்கு மேலே வைத்தால் போதும்.



    Leave A Comment