• Login / Register
  • சினிமா

    ’மேதகு’ திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்!

    ’மேதகு’ திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் கவனம் ஈர்த்த பிரவீன் குமார் (28) இளம் வயதில் காலமாகியுளார்.

    தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற மேதகு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ பாடல் கவனம் பெற்றது.

    ’மேதகு’, ‘ராக்கதன்’ உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளரான இவர், திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது நண்பர்களின் குறும்படங்களுக்கு இசையமைத்தவர்.

    கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரவீன் குமார், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அண்மையில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், இன்று (மே.02) சிகிச்சை பலனின்றி பிரவீன் குமார் உயிரிழந்தார். பிரவீன் குமாரின் மறைவுக்கு பலரும் சமூக  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Leave A Comment