• Login / Register
  • செய்திகள்

    ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்

    தமிழகம் முழுவதும், மாநிலம் தழுவிய போராட்டத்தை ரேஷன் கடை பணியாளா்கள் சங்கங்கள், வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.

    இந்தப் போராட்டம் இன்று முதல் வருகின்ற 9ஆம் தேதி வரை மூன்று நாள்களை நடைபெறுகின்றன.

    இந்தப் போராட்டத்தின் போது, அரசு பணியாளர்களுக்கு வழங்கக் கூடிய 31 சதவிகிதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும்.

    என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ரேசன் கடை ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்றும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


    Leave A Comment