• Login / Register
  • செய்திகள்

    உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களில் 8 இந்தியர்கள்!

    வருடம் தோறும் டைம்ஸ் இதழ் உலகின் சக்திவாய்ந்த நபர்களின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. அதன்படி2024 ஆம் ஆண்டுக்கான  உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. 

    டைம் இதழ் தலைசிறந்த தலைவர்கள், தனித்துவம் பதித்தவர்கள், டைட்டன்கள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 100 சக்திவாய்ந்த நபர்களைப் பட்டியலிடுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் பட்டியலில் 8 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா, ஒலிம்பிக் பதக்க மங்கை சாக்‌ஷி மாலிக், இண்டோ - பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல், பாலிவுட் நடிகை ஆலியா பட், மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, அமெரிக்க அரசுத் துறை ஊழியர் (US Department of Energy’s Loan Programmes Office director ) ஜிகர் ஷா, வானியல் துறை பேராசிரியை பிரியம்வதா நடராஜன், இந்திய வம்சாவளி உணவக தொழிலதிபர் அஸ்மா கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இதுதவிர அமைதிக்கான நோபல் விருது பெற்ற நர்கிஸ் முஹமதி, ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யுலியா நவல்னி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.





    Leave A Comment