• Login / Register
  • செய்திகள்

    மாநிலங்களவை தேர்தல் : நாளை முதல் வேட்புமனுத் தாக்கல்

    தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்கள் வரும் ஜூன் 29ஆம்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு 3 வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. ஒரு இடத்தை கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இன்னும் அதன் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

    இதேப்போல அதிமுக இரு இடங்களுக்குப் போட்டியிடுகிறது.

    இந்தநிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலில் போட்டியிட நாளை (மே 24) முதல் வேட்புமனுத்தாக்கல்  ஆரம்பமாகிறது. மே 31ஆம்தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்.

    வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1ஆம்தேதி நடைபெறுகிறது. மனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசிநாள் ஜூன் 3 ஆகும்.

    Leave A Comment