• Login / Register
  • செய்திகள்

    நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு!

    இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை (03) முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

    அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான, முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

    அதன்படி நாளை (03) முதல் மே 19 வரை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட உள்ளது.

    இதையடுத்து முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

    இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment