• Login / Register
  • செய்திகள்

    திருப்பூரில் இரு லாரிகள் மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே இரு லாரிகள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட  விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் பச்சாபாளையத்தைச் சேர்ந்த 35 பேர், ஒரு சரக்கு லாரியில் கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று விட்டு பச்சாபாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில் முத்தூர் - காங்கயம் சாலை வாலிபனங்காடு அருகே எதிரே வந்த மற்றொரு லாரியில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    வெள்ளக்கோவில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Leave A Comment