• Login / Register
  • செய்திகள்

    மன்னார் உள்ளிட்ட இடங்களுக்கு எச்சரிக்கை!

    இலங்கையின் பல பகுதிகளில் கடும் வெயில் தாக்கம் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று பிற்பகல் வேளை மன்னார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

    இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

    Leave A Comment