• Login / Register
  • செய்திகள்

    இன்று இரவு இடியுடன் கூடிய மழை!

    இலங்கையின் சில பகுதிகளில் இன்று (19) இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

    வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

    அத்துடன் மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும், மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment