• Login / Register
  • செய்திகள்

    மீண்டும் இலங்கையில் இசைஞானி - கொழும்பில் மாபெரும் இசை நிகழ்வு!

    கொழும்பில் இடம்பெற உள்ள மாபெரும் இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இசைஞானி இளையராஜா இன்று இலங்கையை வந்தடைந்தார்.

    கடந்த ஜனவரியில் கொழும்பில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த மாபெரும் இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னதாக வருகைதந்திருந்தார்.

    இலங்கையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

    இதையடுத்து இளையராஜா உடனடியாகவே தமிழ்நாடு திரும்பியிருந்தார். இதனால் குறித்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் மீண்டும் இன்று (ஏப்ரல்-19) இலங்கையை வந்தடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

    நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) கொழும்பில் இடம்பெறவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment