• Login / Register
  • செய்திகள்

    கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினம்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

    கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

    சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து அமைச்சா்கள் உள்ளிட்ட திமுகவின் மூத்த நிா்வாகிகளும் அஞ்சலி செலுத்தினா்.

    மெரீனாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது.

    இப் பேரணிக்கு முதல்வா் தலைமை வகித்து நடந்து சென்றாா். அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவசங்கா், அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், மேயா் பிரியா உள்ளிட்டோா் நடந்து சென்றனா்.

    நினைவிடத்தில் மலா் வளையம் வைத்தும், கருணாநிதியின் சிலைக்கும் முதல்வா், மூத்த நிா்வாகிகள், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

    Leave A Comment