• Login / Register
  • சினிமா

    நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

    உடல்நலக் குறைவு காரணமாக பிரபல நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) சமந்தா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரசிகர்களின் அன்பினால் அந்த கடினமான காலத்தை கடந்து வந்ததாகவும் கூறியிருந்தார்.

    மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது யசோதா திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.

    மேலும், இந்த மாதம் தொடக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படத்தின் விளம்பர நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பேட்டியளித்திருந்தார்.

    இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மயோடிசிஸ் நோயால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

    இதற்கிடையே, சமந்தா நடிப்பில் 5 மொழிகளில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், முதல் 10 நாள்களில் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment