• Login / Register
  • செய்திகள்

    சவுக்கு சங்கர் கைது: அழைத்துச்சென்ற வாகனம் விபத்து

    அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சமூகவலைத்தள பிரபலம்  சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இன்று அதிகாலை 4 மணியளவில் தேனி மாவட்டத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார்  கைது செய்தனர்.

    தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்ற போது தாராபுரம் அருகே அந்த வாகனம் விபத்தில் சிக்கியது.

    விபத்தில் வாகனத்தில் இருந்த காவலர்களுக்கும், சவுக்கு சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.


    Leave A Comment