• Login / Register
  • செய்திகள்

    பல்கலைக் கழக மாணவியை காணவில்லை - பெற்றோர் முறைப்பாடு!

    இலங்கையில் பல்கலைக் கழக மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இலங்கையில் அண்மை காலமாக சிறுவர்கள் கடத்தல் சம்பவம் மற்றும் காணாமல் போகும் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

    களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளார் என காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறியதுடன் மீண்டும் வீட்டிற்கு வருகைத்தரவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவியின் கையடக்க தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் மாணவி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Leave A Comment