வீட்டுக்கூரை இடிந்துவிழுந்து கர்ப்பிணி பெண், தாய் பலி
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி
3ஆவது தெருவைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மனைவி காளியம்மாள். மகள் கார்த்திகா.
கார்த்திகா, மார்த்தாண்டம்பட்டியைச்
சேர்ந்த செல்வராஜு என்பவரை திருமணம் செய்திருந்தார்.
கர்ப்பிணியாக இருந்த கார்த்திகாவுக்கு
அண்மையில் வளைகாப்பு நடத்தப்பட்டு தாய்வீட்டுக்கு
வந்து அவர் தங்கியிருந்தார்.
இவர்கள் வசித்து வந்த வீடு
50 ஆண்டுகள் பழமையான வீடு என்று கூறப்படுகிறது. இந்த கான்கிரீட் வீட்டின் மேற்கூரையில்
பழைய ஓடுகள் வேயப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் அதிகாலை 4 மணியளவில்
வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதில் கர்ப்பிணியான கார்த்திகா, அவரது
தாயார் காளியம்மா இருவரு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். முத்துராமன் வீட்டுக்கு
வெளியே படுத்திருந்ததால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும்
வந்து இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த தாய், மகள் உடல்களை மீட்டனர். உடல்கள் இரண்டும்
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. முத்துராமன் தூத்துக்குடி
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீட்டின் மேற்கூரை இடிந்துவிழுந்து
கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் பலியான நிகழ்வு அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave A Comment