• Login / Register
  • செய்திகள்

    மின்னலுக்கு அண்ணன், தங்கை பலி; இரத்தோட்டையில் சோகம்!

    இலங்கையின் பல பகுதிகளில் நேற்றைய தினம் கடும் இடி மின்னல் தாக்கத்துடன் கனமழை பெய்து வந்த நிலையில் சகோதரர்கள் இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் இரத்தோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

    நேற்று (29) மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

    வெல்காலயாய, இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

    அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

    சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Leave A Comment