• Login / Register
  • செய்திகள்

    மன்னாரில் இளம் குடும்பஸ்தர் பலி - கடலில் மீன்பிடிக்க சென்ற போது துயரம்!

    கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலிலேயே உயிரிழந்த சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

    மன்னார் - முத்தரிப்புத்துறை பகுதியில் நேற்று (24) புதன்கிழமை காலை இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    தொழிலுக்கு சென்ற வேளை கடலில் வைத்து படகு வெளி இணைப்பு இயந்திரத்தின் காற்றாடி (புறொப்ளர்) வெட்டியதில் குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இதன்போது மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்ற இளம் குடும்பஸ்தரே பிரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment