• Login / Register
  • செய்திகள்

    மூன்று நாள் காய்ச்சல்; யாழ் போதனாவில் குடும்பஸ்தர் மரணம்!

    மூன்று நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த குடும்பத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ். போதனா  வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.

    இவ்வாறு உயிரிழந்தவர் பள்ளிமுனை மேற்கு, மன்னாரைச் சேர்ந்த யோன்திரவியம் குமரேசன் (வயது- 49) என்பவராவார்.

    கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் 21 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

    இந் நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(23) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இம் மரணம் தொடர்பில் நேற்று புதன்கிழமை(24) யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

    உடற்கூற்றுப்  பரிசோதனையில் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment