• Login / Register
  • செய்திகள்

    கோடை வெயிலின் தாக்கம்: கோவை மக்களுக்கு எச்சரிக்கை

    அதிகரித்துவரும் வெப்ப அலை காரணமாக அத்தியாவசிய தேவையின்றி மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அத்தியாவசிய தேவையின்றி மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 23-ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தின் வட உள் மாவட்டமான கோவை மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Leave A Comment