• Login / Register
  • செய்திகள்

    தேர்தல் பிரச்சார மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்!

    மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

    மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

    அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். இதனால் மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன். அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்ள வருத் நகருக்குச் செல்கிறேன். உங்கள் அன்புக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.


    Leave A Comment