இந்திய வம்சாவளி இளைஞருக்கு 20 ஆண்டு ஜெயில்: சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 20 ஆண்ட்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு காதலியை தாக்கி கொலைசெய்த குற்றத்திற்காக இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில்,குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் இருந்த கிருஷ்ணன் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி காதலியை சரமாரியாக தாக்கியுள்ளார். காதலியின் தலையை சுவரில் மோத வைத்தும், முகத்தில் அறைந்தும், விலா எலும்பில் குத்தியும் தாக்கியுள்ளார், இதில் படுகாயம் அடைந்த மல்லிகா பேகம் என்ற பெயருடைய அவரது காதலி இறந்தார்.
இதையடுத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த வாரம் நீதிமன்றில் விசாரணையின்போது கிருஷ்ணன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் காதலியை கொன்ற வழக்கில் கிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Leave A Comment