இலங்கையில் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு!
இலங்கையில் நீதிமன்றம் ஒன்றிற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றவாளி கூண்டில் இருந்த ஒருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Leave A Comment