டி20 தொடர் வெற்றி:ராகுல் திரிபாதி ஆதங்கம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றதில் தன்னுடைய பங்களிப்பு பற்றி மனம் ராகுல் திரிபாதி கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது ஆட்டம் பற்றி ராகுல் திரிபாதி கூறியதாவது:
நான் இன்னும் கொஞ்சம் ரன்கள் எடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்பட அனைவரும் என்னுடைய வழக்கமான ஆட்டத்தையே தொடரச் சொல்கிறார்கள். அதனால் முதல் 6 ஓவர்களில் அணிக்கு நிறைய ரன்கள் கிடைக்கும். ஆமதாபாத் மைதானத்தில் இத்தனை பெரிய கூட்டத்தின் நடுவே விளையாடுவது மகத்தானதாக இருக்கிறது. தொடரை வென்றதும் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டத்தில் ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள்இ 4 பவுண்டரிகளுடன் 44 ரன்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment