• Login / Register
  • முகப்பு

    தமிழகத்தில் கொரோனா திடீர் அதிகரிப்பு; 257 பேர் சிகிச்சையில்!

    தமிழகத்தில் இன்று பெண்கள் 17 பேர் உட்பட 40 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (மார்ச் 14) கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 257 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் புதிதாக 2,690 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்போது 40 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து இதுவரை மொத்தம் 6.92 கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

    ஆண்கள் 23 பேரும் பெண்கள் 17 பேருமாக இன்று புதிதாக 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றிலிருந்து 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து இதுவரை 35, 57,008 அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment