• Login / Register
  • விளையாட்டு

    "குடும்பத்தில் ஒருவரை கொன்றுவிடுவோம்": பிரபல கால்பந்து வீரருக்கு மிரட்டல்!

    அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முக்கியமான வீரர் ஏஞ்செல் டி மரியாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    ரொசாரியோவில் உள்ள குற்றங்களுக்குப் பெயர் பெற்ற கும்பல் ஒன்று ஏஞ்செல் டி மரியாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. 

    திங்கட் கிழமை காலை ஏஞ்செல் டி மரியாவின் வீட்டில் ஒரு துண்டுக்காகிதம் வீசப்பட்டுள்ளது. அதில் ஏஞ்செல் டி மரியா மற்றும் அவர் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டிருந்தது.

    2022 உலகக்கோப்பை வென்ற அர்ஜெண்டின அணியின் பிரதான பங்களிப்பு நட்சத்திர வீரர் ஆன ஏஞ்செல் டி மரியா ரொசாரியோவுக்கு வரக்கூடாது மீறி வந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று அந்த துண்டுக்காகிதத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    “உன் மகன் ஏஞ்செலிடம் சொல்லி வை, ரொசாரியோ பக்கம் அவன் வரக்கூடாது, மீறி வந்தால் குடும்பத்தில் ஒருவரை கொலை செய்து விடுவோம். உன்னை கவர்னர் புல்லாரோ கூட காப்பாற்ற முடியாது நாங்கள் பொதுவாக காகித மிரட்டல் விடுப்பவர்களல்ல, புல்லட்களையும் கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும் அப்படியே விட்டு விட்டு வருபவர்கள். ” என்று அந்த துண்டுக்காகிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    அர்ஜெண்டினா போலீஸ் துறையும் வழக்கறிஞர்களும் இந்த விவகாரத்தை விசாரித்து வருகின்றனர். அதாவது டி மரியா தனது லோக்கல் கிளப்புக்கு விளையாட ரொசாரியோ திரும்பினால் நிச்சயம் கொலை விழும் என்று மிரட்டப்பட்டுள்ளது.

    ஓராண்டுக்கு முன்பு லியோனல் மெஸ்ஸியின் உறவினர் ஒருவர் வைத்திருக்கும் சூப்பர் மார்க்கெட் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதோடு, ‘மெஸ்ஸி உனக்காகத்தான் காத்திருக்கிறோம்’ என்று மிரட்டல் செய்தியும் விட்டு விட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



    Leave A Comment