• Login / Register
  • செய்திகள்

    இலங்கை: 18 வயது சிறுமி கடத்தல் - 5 பேர் கைது!

    இலங்கை - சிலாபம் பிரதேசத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அண்மை நாட்களாக இலங்கையில் சிறுவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகள் காணாமல் போகும் சம்பங்கள் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சிலாபம் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    தம்புள்ளை விசேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

    21 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹலவத்த தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் இன்று (22) சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

    Leave A Comment