• Login / Register
  • செய்திகள்

    இலங்கையில் போலீஸ் பாதுகாப்புடன் ரயில் சேவை!

    இலங்கையில் அரசாங்கத்தின் பல்வேறு முடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை பாரிய தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று ஏற்பாடாக போலீஸ்ட பாதுகாப்புடன் சில பிரதேசங்களில் தொடருந்து சேவையினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    ,
    பயணிகளின் வசதிக்காக நாளை (15) அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு வரை பயணிக்கும் 13 அலுவலக ரயில் சேவைகள் வழமையான நேரத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸ் பாதுகாப்பு போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட் உள்ளதாக தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்திருந்த நிலையில், தொடருந்து திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு இன்று அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment