ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள்: பாக்கிஸ்தானில் ஆச்சரியம்
பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
பாகிஸ்தான் - ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் ஜீனத் வஹீத்(27) என்ற பெண் வெள்ளிக்கிழமை ஆறு குழந்தைகளைப் அவர் பெற்றெடுத்ததாக டான் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார்.
பிறந்த குழந்தைகளில் நான்கு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் என்றும் ஒவ்வொன்றும் இரண்டு பவுண்டுகளுக்கும் குறைவான எடை கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு குழந்தைகளும் அவர்களின் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஃபர்சானா தெரிவித்தார்.
இருப்பினும் குழந்தைகளை மருத்துவர்கள் இன்குபேட்டரில் வைத்துள்ளனர்.
Leave A Comment