• Login / Register
  • முகப்பு

    இறுதி யுத்தத்தில் கையை இழந்தவர் குடும்பத்துடன் தமிழ்நாட்டில் தஞ்சம்!

    இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கையை இழந்த ஒருவர் குடும்பத்துடன் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ முடியாது தமிழ்நாடடிற்கு அகதிகளாக வந்துள்ளதாக தெரிவித்தனர்.

    இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் அங்கு வாழ முடியாது, ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 ஈழத் தமிழர்கள் இன்று (26) காலை ராமேஸ்வரம் அடுத்த கோதண்டராமர் கடற்கரைக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதனையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 254 இலங்கை தமிழர்கள் தமிழ்டிற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

    இந்நிலையில் இலங்கை யாழ்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியை சேர்ந்த கிங்ஸ்டின், அவரது மணைவி ரஞ்சினி, அவர்களது மகள் தபெந்தினி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று ராமேஸ்வரம் பகுதியை வந்தடைந்துள்ளனர்.

    இலங்கை - யாழ்பாணம் கடற்கரையில் இருந்து நேற்று காலை பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள கோதண்டராமர் கடற்கரையில்   வந்தடைந்துள்ளனர்.

    தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் கிங்ஸ்ட்னுக்க இலங்கை இறுதி கட்ட போரின் போது வெடி குண்டு பட்டத்தில் வலது கையை இழந்துள்ளார். இவர் தற்போது மீன் பிடி தொழில் செய்து வரும் நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் இலங்கையில் வாழ வழி இன்றி தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.

    பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 3 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    இதையடுத்து, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களது எண்ணிக்கை  257 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment