• Login / Register
  • முகப்பு

    இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!

    இலங்கையில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அண்மை காலமாக இலங்கையில் நிலநடுக்கம் எற்பட்டு வருகிறது.

    கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில் இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கதிர்காமம் லுனுகம்வெஹர பகுதியில் சிறியளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

    குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

    நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

    Leave A Comment