• Login / Register
  • முகப்பு

    ஆட்சி கவிழ்ப்பு மிரட்டல்.. அமித்ஷா பதவி விலக வேண்டும் - மம்தா பானர்ஜி!

    மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சி கவிழ்க்கப்படும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷத தெரிவித்தமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மம்தா பானர்ஸி, தனது ஆட்சி கவிழ்க்கப்படும் என்று மிரட்டல் விடுத்ததற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    கடந்த 14ம் தேதி, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 35 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் போதும், 2025-ம் ஆண்டுக்குள் மம்தாவின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று எச்சரித்தார்.

    அமித்ஷாவின் இந்த கருத்துக்கு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்படும் என உள்துறை அமைச்சர் கூறியது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்புடையதல்ல என்று சாடிய அவர், தனது கருத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த நிலையில், அனைவரும் ஒன்றிணைந்தால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்த முடியும் என மம்தா பானர்ஜி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

    Leave A Comment