• Login / Register
  • ஆன்மிகம்

    உயிர்த்த ஞாயிறு; உலகவாழ் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்!

    உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் உயிர்த்த ஞாயிறு தினத்தை இன்று (09) கொண்டாடி வருகின்றனர்.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.

    இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள பல தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு தின விசேட ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

    இன்றைக்கு 2023 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவங்களுக்காகவும், சாபங்களுக்காகவும் தனது இன்னுயிரை தியாகம் செய்தார்.

    அவ்வாறு உலக பாவங்களை சுமந்து தீர்ததை கிறிஸ்தவர்கள் கடந்த பெரிய வெள்ளியன்று மிகவும் பயபக்தியோடு அனுஸ்டித்தனர்.

    அவ்வாறு புனித வெள்ளியை அனுஸ்டித்த கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் புளிப்பில்லா அப்ப பண்டிகை எனப்படும் பாஸ்காவை நினைவு கூறுகின்றனர்.

    வாரத்தின் முதலாம் நாளான இன்று போன்றதொரு ஞாயிற்றுக்கிழமை நாளில் கிறிஸ்து இயேசுவில் அதித விசுவாசம் கொண்டிருந்த மூன்று பெண்கள் இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு சென்ற இயேசுவின் சடலத்தை தேடினார்கள்.

    ஆனால் இயேசு அங்கு இருக்காதலால் மிகுந்த கலக்கம் அடைந்த அவர்கள் முன் இரண்டு தேவதூதர்கள் தோன்றி 'உயிரோடிருப்பவரை மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன' என வினவினர்.

    அத்துடன் அவர் இங்கே இல்லை, அவர் உயிர்தெழுந்தார், மனுஸகுமாரன் பாவிகளான மனிதர்களின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டும் என்பதாக அவர் சொன்னதை நினைவு கூருங்கள் என்றார்.

    அவர் சொன்னதை அந்த மூன்று பெண்களும் விசுவாசித்து அதை சீடர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவித்தார்கள்.

    அதனையே கிறிஸ்தவர்கள் இன்றும் விசுவாசித்து இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை உயிரித்த ஞாயிறு தினமாக கொண்டாடுகின்றனர்.

    Leave A Comment